2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்திலேயே இந்த சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் அவரிடமிருந்து 600 மில்லிக்கிராம் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
 
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்தியபோது இவர் போதைப்பொருள் வைத்திருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினார். 

சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .