2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

வாகன உதிரிப்பாகங்களை திருடி விற்பனை செய்தவர்களும் கொள்வனவு செய்தவர்களும் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 20 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


வாகன உதிரிப்பாகங்களை திருடி விற்பனை செய்ததாகக் கூறப்படும் 5 பேரையும் இந்த  உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் 4 பேரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள 2 வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையங்களிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான உதிரிப்பாகங்களை இந்த 5 சந்தேக நபர்களும்  திருடி மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இவ்வாகன உதிரிப்பாகங்களை திருடி விற்பனை செய்ததாகக் கூறப்படும் 5 பேரையும் இவற்றை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் 4 வியாபாரிகளையும் நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் சில காலமாக இந்த விற்பனை நிலையங்களுக்குச் சென்று உதிரிப்பாகங்களை திருடியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார்,  சுமார் 10,000 முதல் 15,000 ரூபா பெறுமதியான உதிரிப்பாகங்களை 1,000 முதல் 2,000 ரூபா வரையில் விற்பனை செய்துள்ளதாகவும் கூறினர்.
கைதுசெய்யப்பட்டவர்களை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X