2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஒருவர் கொலை; சந்தேகத்தில் ஒருவர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, செல்வநகர் பிரதேசத்தில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின்  பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி செல்வநகர் காளிகோயில் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில்  31 வயதான பேரின்பநாயகம் குணசீலன் என்பவரே இவ்வாறு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையுண்டவரின் சடலம் தற்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .