2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

3 கிலோ கஞ்சாவுடன் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தபோதே, இந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாம்புரி பிரதேசத்திலேயே இந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் வெளியிடங்களிலிருந்து கல்பிட்டி பிரதேசத்திற்கு கஞ்சா கொண்டு வந்து விநியோகம் செய்வதாக புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து  சந்தேக நபர் பயணித்த பஸ்ஸில் பயணித்த இந்த அதிகாரிகள் அவரைக் கைதுசெய்து கல்பிட்டி பொலிஸில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினார். 

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .