2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Kogilavani   / 2013 ஜூலை 03 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அவுகன பௌத்த விஹாரை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் ஹெரொயின் விற்பனையில்  ஈடுபட்டிருந்த  நபர் ஒருவரை கல்னேவ பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மேற்படி நபர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அவுகனை புத்தர் சிலை மற்றம் விஹாரை அமைந்துள்ள இடத்திற்கு அருகிலுள்ள வயல் வெளியில் ஹெரொயின் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கலாவெவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 5110 மில்லிகிராம் ஹெரொயினும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்னேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X