2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன், சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


யாழ். புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகிலுள்ள வயல் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை  காலை மீட்கப்பட்டுள்ளது.

புத்தூர் கிழக்கைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி (வயது 27) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு  தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வீட்டிற்கு வெளியில் சென்ற இப்பெண், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து இப்பெண்ணை உறவினர்கள் தேடியதுடன்,  இது தொடர்பில்  அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை காலை முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை வயலில் மாடு கட்டுவதற்காகச்; சென்ற ஒருவர் வயல் கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு தகவல் வழங்கினார்.

சம்பவ இடத்திற்கு வந்த அச்சுவேலி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X