2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

சிறுமியின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர் பட்டித்திடல் அகதி முகாமிலுள்ள சிவசோதி திலனிக்கா (வயது 13) என்பவர் ஞாயிற்றுக்கிழமை (23)  சடலமாக மீட்கப்பட்டார். 

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.நூருள்ளா தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகளை  மூதூர் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்

ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் இவர், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது  சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் தோப்பூர் பட்டித்திடல் முகாமில் தங்கியிருந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X