2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஆயுதத்தால் குத்தப்பட்டு இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கிஷாந்தன்

அக்ரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹென்வோல்ட் தோட்டப் பிரிவில் ஆக்ரா தோட்டத்தைச் சேர்ந்த யோகஸ்வரன் தினேஸ் (வயது 22) என்பவர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

புதன்கிழமை  (26) மாலை இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை அக்கரப்பத்தனை பொலிஸார் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக  அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X