2025 ஜூலை 16, புதன்கிழமை

சடலத்தை அடையாளம் காட்ட வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 14 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் புகையிரத பாதைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காட்டுவதற்கு உதவுமாறு  கிளிநொச்சி வைத்தியசாலை பதில் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

28 வயது மதிக்கத்தக்க மேற்படி ஆணின் சடலம் வியாழக்கிழமை (13) மீட்கப்பட்டு, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பிரேத அறையில்; வைக்கப்பட்டுள்ளது.

இச்சடலத்திற்கு உரியவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பில்  விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .