2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 01 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து  குடும்பஸ்தர் ஒருவரின்  சடலம் வியாழக்கிழமை (01) மாலை  மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மகாரம்பைக்குளத்தை சேர்ந்த டெனி (வயது 37)  என்று அழைக்கப்படும் 3 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

கனகராயன்குளத்தில் நீண்டகாலமாக இவர்  தங்கியிருந்து மேசன் வேலை செய்துவந்துள்ளார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில்  கனகராயன்குளம் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .