Editorial / 2018 ஜனவரி 06 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிக்கடுவ , காஸ்லன்ட் தோட்டப் பிரதேசத்தில், நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஹெரிஸ்லன்ட் தோட்டம் , கோனபீனுவல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாக்குதலில் படுகாயங்களுக்கு உள்ளான நபரை, ஆராச்சிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில், 16 வயதான நபரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026