2024 மே 15, புதன்கிழமை

சொக்கலட்டுடன் தங்கம் கடத்தியவர் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 12 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 டுபாயிலிருந்து  சட்டவிரோதமாக  தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 இன்று(12) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 34 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

3 கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த தங்க நகைகள் 5.07 கிலோகிராம் நிறையுடையது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொக்கலட்டுகள் கொண்டு வரப்பட்ட பையில் மிகவும் சூட்சுமமாக மறைத்து குறித்த தங்க நகைகள் கொண்டு வரப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .