2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’இரண்டு தவறுகள் ஒரு நல்ல விடயத்துக்குத் தீர்வாகாது’

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் இளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்பதற்காக, போட்டிகளை இடம்மாற்றக்கோரி பலரும் குரல் கொடுத்தனர்; போராட்டங்களும் நடைபெற்றன. அதனால் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 47 நாட்களாகத் திரையுலகினர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், நாளை முதல் புதுப்படங்கள் வெளியாகவுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட்டை இடம் மாற்றியது போல், காவிரி முகாமைத்துவ சபை அமைக்கப்படும்வரை புதுப்படங்களின் வெளியீடு

"வேலை நிறுத்தத்துக்குப் பிறகு நிறைய நல்ல மாற்றங்களுடன் சினிமாத்துறை மறுபடியும் வந்துள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான தினசரி சம்பளக்காரர்கள், தன்னுடயை குழந்தைகளுக்கான பாடசாலைக் கட்டணத்தை உரிய நேரத்தில் கட்ட முடியும். இந்த நல்ல தீர்வை அடைவதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.

அதேசமயம், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், சினிமாவையும் புறக்கணிக்கக் குரல் கொடுப்பார்களா? இரண்டு தவறுகள் ஒரு நல்ல விடயத்துக்குத் தீர்வாகாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தவறை ஏற்றுக்கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X