Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 17 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைச் சினிமாவின் பெருமையை உலக அரங்கில் ஒலிக்கச் செய்யும் வகையில் உருவாகியுள்ள “நீறுபூத்த நெருப்பு (Fire Beneath Ash)” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படம் இலங்கை மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்களை ஒரே மேடையில் இணைத்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும்.
யாழ்.மண்ணில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் சர்வதேச விருது பெற்ற இலங்கை இயக்குநர் தேவிந்த் கோங்காகே.
ஜெர்மனிக்கான இலங்கை தூதுவரும் முன்னாள் நீதியரசருமான சரத் கோங்காகேவின் புதல்வர் தேவிந்த், இலங்கையின் இளம் தலைமுறை இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர்.
அவரின் முன்னணி படைப்புகளில் கிரிவசிபுர, பவதாரண, நாட்டாமி ஆமி ஆகியவை அடங்கும்.
குறிப்பாக கிரிவசிபுர திரைப்படம், இலங்கையின் கடைசி மன்னன் சிரிவிக்கிரம ராஜசிங்கன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு சர்வதேச அளவில் பெரும் பாராட்டைப் பெற்றது. இத்திரைப்படத்துக்கு பிபிலதெனிய மகாநாம தேரர். இசையமைத்துள்ளார்
இந்தியாவில் இசை கற்று, இலங்கையில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த அனுபவமிக்க கலைஞர் இவர்.
“போய்வாரேன் உயிரே” என ஆரம்பிக்கும் இதயத்தை நெகிழ்விக்கும் பாடலை எழுதியுள்ளார் தமிழ் சினிமா பாடலாசிரியர்,“ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” பாடல் புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்மின்.இது அவரது முதல் இலங்கை தமிழ் திரைப்படப் பாடல் ஆகும்.
இந்தப் பாடல் மூலம் இலங்கைப் பாடகி Zee Tamil Title Winner கில்மிஷா,மேலும் Shakthi TV Junior Superstar புகழ் சாதீர் அஹமத் ஆகியோர் திரைபாடகர்களாக அறிமுகமாகின்றனர்.
பொத்துவில் அஸ்மின் எழுதி , சாதீர் பாடிய “வானம் பூமி” பாடல் இன்னும் ஆசிரியர் தினங்களில் இலங்கையெங்கும் பாடப்படுவதால் பிரபலமானது.
இந்திய தமிழ் நடிகர்கள் போஸ் வெங்கட், ஜி. எம். குமார், தேஜு வெங்கட் ஆகியோரோடு இணைந்து அரவிந்தன் சிவஞானம், தர்ஷி பிரியா, செளவ்மியா சத்தியசீலன், எல்ராய் அமலதாஸ்,கோபி ரமணன், கிரேஸ் தென்னகோன், மகேந்திரநாத் வீரரத்ன், வகீஷா சால்காடோ, ஜெராட் நோயல், பால்ரெஜி பிரேம்குமார், மரியம் விஜயரத்ன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“நீறுபூத்த நெருப்பு” பற்றி பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் கூறியது
“நீறுபூத்த நெருப்பு மனிதாபிமானம், சமாதானம் மற்றும் இன ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு, இசை, ஒப்பனை, கலை, ஒலி – அனைத்திலும் தரம் மிகுந்த படைப்பாக இது அமைந்துள்ளது. இது இலங்கைச் சினிமாவுக்குள் ஒரு புதிய மைல் கல், மேலும் இதில் நடித்த பல கலைஞர்களுக்கும் திரை வாழ்வில் முக்கிய திருப்பமாக அமையும். சர்வதேச அளவிலும் பேசப்படும் திறன் கொண்ட இப்படம் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெறும் என நம்புகிறேன்.
இத்தகைய தரமான இலங்கைத் திரைப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்றியதில் மிகுந்த பெருமிதம் அடைகிறேன். இயக்குநர் தேவிந்த் கோங்காகே அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்று கவிஞர் பொத்துவில் அஸ்மின் தெரிவித்தார்.
“நீறுபூத்த நெருப்பு” திரைப்படம் மனித நேயம், கலாச்சார ஒற்றுமை, மற்றும் கலை நுணுக்கம் ஆகியவற்றின் சங்கமமாக உருவாகியுள்ளதால், இது இலங்கை மற்றும் தென்னிந்திய சினிமாவுக்குள் ஒரு சர்வதேச தரமான படைப்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Oct 2025