2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரஜினிக்கும் கமலுக்கும் அரசியல் பேசத் தடை

Editorial   / 2018 மே 02 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் கல்லூரி விழாக்களை அரசியல் பேசும் களமாக அரசியல் கட்சித் தலைவர்கள் மாற்றி வருவது மாணவர்களிடையே குழப்பத்தையே ஏற்படுத்தும் என்பதால் இனி அரசியல் பேச அனுமதி அளிக்கக்கூடாது என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் புதிதாக அரசியல் இயக்கங்களை ஆரம்பித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் பல கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றார். அந்த நேரங்களில் அவர் அரசின் கொள்கை முடிவுகளையும், பொதுமக்களின் பாதிப்புகள் குறித்தும் கருத்து வெளியிட்டு வருகிறார்.

இதேபோன்று சமீபத்தில் பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அதிரடியாக பல கருத்துகளையும், தனது அரசியல் பிரவேசம் குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் பேசினார். இதேபோன்று பட்டிமன்றம், மாணவர்களை மையப்படுத்திய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் நடத்தி வருகின்றன.

இதில் கலந்துக்கொண்டு பேசுபவர்கள் அரசியலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது போன்ற நிகழ்ச்சிப் போர்வையில் தொடர்ந்து மாணவர்களிடையே அரசியல் கருத்துகள் கல்லூரி விழா போர்வையில் கொண்டு செல்லப்படுகிறது. இதை கவனத்தில் கொண்ட கல்லூரி கல்வி இயக்ககம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X