2025 மே 19, திங்கட்கிழமை

விளம்பரம் தேவையில்லை: நயன்தாரா

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 16 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளாமரைவிட அதிகம் நற்பணிகள் செய்ய விரும்புவதாக கூறுகிறார் நடிகை நயன்தாரா. ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி திரைப்படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இத்திரைப்படத்தை அட்லி இயக்க, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருக்கிறார்.

அடுத்தடுத்து தனது படங்கள் ரிலீசாவதால் நயன்தாரா சந்தோஷத்தில் இருக்கிறார். அத்துடன் இப்போதெல்லாம் நயன்தாரா நிறைய தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டாராம்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, 'நான் நடிக்க வந்திருக்கிறேன். நடிப்பு, தோற்றம் அல்லது கிளாமரை பார்த்து ரசிகர்கள் எங்களை ரசிக்கிறார்கள். ஆனால் அதைவிட இன்னும் நிறைய பணிகள் எங்களுக்காக காத்திருக்கின்றன. பெண்கள் எப்போதுமே பல்வேறு திறமைகள் கொண்டவர்கள்.

சினிமா, தொழில்துறை, வங்கி என எந்த துறையில் இருந்தாலும் நாட்டுக்காக அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பார்கள். அந்த எண்ணம் எனக்கும் இருக்கிறது.

அந்த வகையில் நான் சமூகத்துக்கு பல நற்பணிகள் செய்கிறேன். அந்த நற்பணிகளை வெளியில் சொல்லி விளம்பரம் தேடிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை' என்ற கூறியிருக்கிறார் நயன்தாரா.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X