2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

விதவைகள் மறுமணத்தை வலியுறுத்தும் த்ரிஷா...

Menaka Mookandi   / 2013 நவம்பர் 15 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் த்ரிஷாவும், சபானா ஆஸ்மி போன்று பெரிய சமூக சேவகி ஆகிவிடுவார் போல் தெரிகிறது. சினிமாவில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே நாய்களை பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் அவர், தெரு நாய்களை யாராவது கல்லால் அடிப்பதை கண்டு விட்டால் பொங்கி எழுந்து விடுவார்.

அதோடு, தான் காரில் செல்லும்போது சாலை ஓரங்களில் நாய்குட்டிகள் அநாதையாக கிடந்தால் காரை நிறுத்தி, பிராணிகள் நலவாரிய அமைப்பினரை வரவைத்து அவர்களிடம் ஒப்படைப்பார்.

சினிமாவில் பிஸியாக இருந்த போதே இதை செய்து வந்த த்ரிஷா, இப்போது நடித்து வரும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், பிராணி அமைப்புகள் சம்பந்தப்பட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும், தற்போது த்ரிஷாவின் சமூக ஆர்வம் மனிதர்கள் பக்கமும் திரும்பியிருககிறது. அதாவது, விதவை திருமணம் குறித்து தனது கருத்துக்களை தற்போது வெளியிட்டு வரும் அவர், விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது போல், கணவரை இழந்த பெண்களும் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கருத்து கூறியுள்ள த்ரிஷா, எதிர்காலத்தில் இது சம்பந்தமான விழிபபுணர்வு பிரச்சாரங்களிலும் இறங்க திட்டமிட்டுள்ளாராம். த்ரிஷாவின் இந்த கருத்துக்கு பல சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்களாம்.



  Comments - 0

  • J.Hashim Sunday, 17 November 2013 07:32 AM

    இஸ்லாம் மார்க்கத்தில் விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுப்பது வலியுறுத்த‌ப்பட்டுள்ளது.

    Reply : 0       0

    Ash Monday, 18 November 2013 04:29 AM

    விதவைகளின் மறுமணம் பல சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .