Editorial / 2017 நவம்பர் 25 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, பாராட்டு பெற்றத் திரைப்படம் அறம். கோபி நயினார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.
“அறம் திரைப்படம், என்னுடைய பரிவாரா என்றத் திரைப்படத்தின் கதை. அதைத் திருடி படமாக்கிவிட்டனர். இதற்கு இழப்பீடாக, 20 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என்று, கர்நாடகாவை சேர்ந்த தயாரிப்பாளர் மனோஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஏற்கெனவே மெட்ராஸ், கத்தி ஆகிய திரைப்படங்கள், தனது கதைகள் என புகார் கூறியவர் கோபி. இப்போது அவரது படத்துக்கே அது போன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளமை, சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026