George / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஹூமா குரேஷியும், சொஹைல் கானும் நெருங்கி பழகி வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இந்த கிசுகிசுக்கள், குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவரான சல்மான் கானை ரொம்பவே அப்செட் செய்து விட்டதாம்.
இதன் காரணமாக, டிசெம்பர் மாதம் பன்வல் பண்ணை வீட்டில் நடந்த சல்மான் கானின் 50ஆவது பிறந்தநாள் விழாவுக்கு வந்த ஹூமாவிடம் சல்மான் முகம் கொடுத்துக் கூட பேசவில்லையாம்.
அவரிடம் இருந்து விலகியே இருந்தாராம். சல்மான், ஹூமாவை ஒதுக்கியது விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றாகவே தெரிந்ததாம். வெளி நபர்களால் தங்கள் குடும்பத்தில் விரிசல் வருவதை சல்மான் பொறுத்துக் கொள்ள விரும்பாததால் தான் இந்த கோபமாம்.
ஆனால், சொஹைல் உடன் கிசுகிசுக்கபட்டதும் அது பற்றி ஹூமாவிடம் கேட்ட போது, சொஹைல் எனக்கு பெரிய அண்ணன் போன்றவர் என கூறி அதற்கு முற்றிப்புள்ளி வைத்து விட்டார். இருந்தும் ஹூமா மீது சல்மானின் கோபம் குறையவில்லையாம்.
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago