Editorial / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகை இஷா குப்தா, அறை ஆடை புகைப்படம் மற்றும் நிர்வாணப் புகைப்படங்களை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதைப் பார்த்த இரசிகர்கள், தொடர்ந்து அவரைக் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலை எதுவும் இல்லாமல் இருப்பவர்கள் தான், அடுத்தவர்களை ஒன்லைனில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒன்லைனில் நேரத்தை கழிப்பவர்களே, இவ்வாறு பேசுகின்றவர்கள் என்று, நடிகை கூறியுள்ளாராம்.

“ஒன்னுமில்லாதவர்களின் கருத்தை மதித்தால், அது என் தவறாகிவிடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளாராம். “கடவுளின் அருளால் பெயரும், புகழும் கிடைத்தால், படங்களை விளம்பரம் செய்வதை தவிர, நாம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

“கருத்தைத் தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் கலாய்ப்பவர்கள் எதை வேண்டுமானாலும் கலாய்ப்பார்கள். அவர்கள் உருப்படியாக ஏதாவது வேலை செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றாராம் இஷா.

1 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Nov 2025