2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கையைபிரதிபலிக்கும் தரமணி

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல கலாசாரம், பல்வேறு பின்னணியிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படமாக, ‘தரமணி’ திரைப்படம் உருவாகியிருப்பதாக இயக்குநர் ராம் கூறியுள்ளார். 

ராம் இயக்கத்தில், ஆன்ட்ரியா மற்றும் வசந்த் ரவியின் நடிப்பில், நாளை 11ஆம் திகதி வெளியாகும் திரைப்படம், ‘தரமணி’. தற்கால ஆண், பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாசாரம் பற்றியும் பேசும் திரைப்படமாக இது அமைந்துள்ளது.  

இதுகுறித்து இயக்குநர் ராம் பேசுகையில், ‘’அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை, அவர்களது கலாசாரம் ஆகியவற்றில், நான் கண்ட விடயங்களின் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதை தான், ‘தரமணி’.  

“நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாதச் சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்க்கம், தங்கள் காதலி/மனைவியைப் புரிந்துகொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி ‘தரமணி’ திரைப்படத்தில் பேசியுள்ளேன். ‘தரமணி’ பல கலாசாரம், பல்வேறு பின்னணியிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான திரைப்படம்” என்று அவர் கூறியுள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X