Editorial / 2019 ஜனவரி 07 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ள அபாயத்தை தொடர்ந்து ஒரு மாதத்தின் பின்னர் கூகிள் நிறுவனம் வெள்ள அபாயங்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அல்லது தகவல் தெரிவிக்கும் சேவை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் முனைப்புடன் செயற்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து இதற்கான பைலட் திட்டத்தை செப்டெம்பர் மாதத்தின் ஆரம்ப நாள்களில் தொடங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது டெக்ஸ் வடிவிலான எச்சரிக்கையை வழங்குவதற்கு முழுமையாக கூகிள் நிறுவனம் தயாராகியுள்ளது.
எனினும் இச்சேவை முதன் முறையாக இந்தியாவில் மாத்திரமே அறிமுகமாகின்றது.
இந்தியாவின் எப்பகுதியில் வெள்ளம் ஏற்படினும் அங்குள்ள மக்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை முன்னறிவித்தல் விடுக்கப்படும். இவ்வசதி படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
13 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago