2025 மே 22, வியாழக்கிழமை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பால்குட பவனி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோகித்)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை, வெல்லவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 39ஆம் கிராமம் செல்வா நகர், 2ஆம் வட்டாரம் விஷ்ணு ஆலயத்திலிருந்து கூழாவடி ஸ்ரீசித்திவிநாயகர், முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு பால்குட பவனி எடுத்துவரப்பட்டது.


39ஆம் கிராமம் கூழாவடி ஸ்ரீசித்திவிநாயகர், முத்துமாரியம்மன் ஆலய பரிபாலனசபை ஏற்பாட்டில் நேற்று முற்பகல் நடைபெற்ற பால்குட பவனியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


விஷ்ணு ஆலயத்திலிருந்து கூழாவடி ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் பூசைகள் நடைபெற்று முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு பால்குடங்கள் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X