2025 மே 19, திங்கட்கிழமை

கொக்குவில் வீரம்மா காளியம்மன் ஆலய பாற்குட பவனி

Kogilavani   / 2013 ஜூன் 17 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு கொக்குவில் வீரம்மா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு பாற்குட பவனி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரிலுள்ள ஸ்ரீ வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குட பவனி மட்டக்களப்பு திருமலை வீதி, ஊறணி வீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கலந்துகொண்டு பாற்குட பவனியை ஆரம்பித்து வைத்தார்.

பாற்குட பவனியுடன் பறவைக் காவடியும் இடம்பெற்றது.

பாற்குட பவனி நிறைவு பெற்றதும் ஆலயத்தில் அன்னதானக் குழுவினரால் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X