Ilango Bharathy / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
1847 : ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.
1923 : இலண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி, மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போர் - ஹங்கேரி நாட்சி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
1944 : இரண்டாம் உலகப் போர் - மேற்குப் போர்முனையின் கடைசிப் போர் நார்ட்வின்ட் நடவடிக்கை ஆரம்பமானது.
1946 : அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1963 : மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகக் கலைந்தது. சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகள் உருவாகின.
1968 : உலகின் முதலாவது சூப்பர்சோனிக் பயணிகள் விமானம், துப்போலெவ் டி.யு-144 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
1981 : கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் இல்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
1983 : நைஜீரியாவில் இராணுவத் தளபதி மேஜர் முகம்மது புகாரி தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இரண்டாவது நைஜீரியக் குடியரசு கலைந்தது.
1984 : ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
1986 : புவேர்ட்டோ ரிக்கோவில் சான் வான் நகரில் உணவுசாலையை அதன் மூன்று ஊழியர்கள் தீ வைத்ததில், 97 பேர் கொல்லப்பட்டு 140 பேர் காயமடைந்தனர்.
1987 : ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1992 : செக்கோஸ்லோவாக்கியா கலைக்கப்பட்டு செக் குடியரசு, சிலோவாக்கியா என இரு நாடுகளாகப் பிரிந்தது.
1994 : பீனிக்சு தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.
1999 : ரஷ்யாவின் முதலாவது அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகினார். பிரதமர் விளாதிமிர் பூட்டின் அரசுத்தலைவரானார்.
1999 : 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
1999 : இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஐ கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள், தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து, 190 பணயக்கைதிகளையும் விடுவித்துவிட்டு, விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
2004 : உலகின் அப்போதைய மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீற்றர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
2006 : ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.
2009 : நீல நிலவும் நிலவு மறைப்பும் நிகழ்ந்தன.
9 minute ago
15 minute ago
28 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
28 minute ago
58 minute ago