Janu / 2025 நவம்பர் 18 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1307: சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் டெல் என்பவர் தனது மகனின் தலையில் வைக்கப்பட்ட அப்பிளை துப்பாக்கியால் சுட்டார்.
1421: நெதர்லாந்தில் ஸுய்டர்ஸீ எனும் இடத்தில் கடலிலிருந்து பாதுகாப்பதற்காக கட்டப்பட்டிருந்த மதில் உடைந்ததால் 72 கிராமங்களில் கடல்நீர்புகுந்து சுமார் 10 ஆயிரம் பேர் பலி.
1493: கிறிஸ்டோபர் கொலம்பஸ் பியூர்ட்டோ ரிக்கோ தீவை முதல் தடவையாக கண்டார்.
1809: வங்காள விரிகுடாவில் கிழக்கிந்திய கம்பனியின் படைகளை பிரெஞ்சு படைகள் தோற்கடித்தன.
1903: அமெரிக்கா கனடாவில் ஆயிரக்கணக்கான இருந்த நேர வலயங்களுக்குப் பதிலாக 5 நேர வலயங்கள் ஏற்படுத்தப்பட்டன.
1905: டென்மார்க் இளவரசர் கார்ல், நோர்வேயின் 7 ஆம் ஹக்கோன் மன்னரானார்.
1918: ரஷ்யாவிலிருந்து லத்வியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1926: ஜோர்ஜ் பேர்னாட்ஸா தனத நோபல் பரிசுப் பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தார்.
1943: இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் நகர் மீது பிரிட்டனின் 440 விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். பிரிட்டன் 9 pமானங்களையும் 53 படையினரையும் இழந்தது.
1945: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறந்தார்.
1947: நியூஸிலாந்தில் கடைத்தொகுதியொன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் 41 பேர் பலி.
1961: அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 18 ஆயிரம் இராணுவ ஆலோசகர்களை வியட்நாமுக்கு அனுப்பினார்.
1963: பொத்தான் இலக்கங்களை கொண்ட தொலைபேசிகள் சேவைக்கு வந்தன.
1978: கயானாவில் மதநிலையமொன்றின் அறிவுறுத்தல் காரணமாக 270 சிறார்கள் உட்பட 900 பேர் கூட்டாக தற்கொலை.
1987: லண்டனில் பாதாள ரயில் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 பேர் பலி.

6 minute ago
9 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago