2025 மே 21, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 16

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1431: இங்கிலாந்தின் 6ஆம் ஜோர்ஜ் மன்னர் பிரான்ஸின் மன்னராக பாரிஸில் முடிசூட்டப்பட்டார்.

1920: சினாவின் கன்ஸு மாநிலத்தில் 8.5 றிச்சர் அளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் சுமார் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.

1946: ஐக்கிய நாடுகள் சபையில் தாய்லாந்து இணைந்தது.

1950: கொரிய யுத்தத்தில் சீனப்படைகள், வடகொரிய படையினருடன் இணைந்ததையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார்.

1953: அமெரிக்க வெள்ளைமாளிகையில் முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.

1971: பங்களாதேஷ் பிரிவினை யுத்தத்தின்போது இந்தியப் படையினரும் பங்களாதேஷின் முக்தி பாஹினி கெரில்லாக்களும் பாகிஸ்தான் படையினரை தோற்கடித்தனர். 93,000 பாகிஸ்தான் படையினர் சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் கிழக்குப் பாகிஸ்தானுக்குப் பொறுப்பான ஜெனரல்; ஏஏ.கே.நியாஸியும் இந்திய இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் ஜகித் சிங் அரோராவும் கையெழுத்திட்டனர்.

1986: சோவியத் யூனியனின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கஸகஸ்தான் பிராந்தியத்தில் போராட்டம் ஆரம்பமாகியது.

1991: கஸகஸ்தான் சுதந்திர தனி நாடாகியது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .