Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 29 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1825: பிரேஸிலின் சுதந்திரத்தை போர்த்துக்கல் அங்கீகரித்தது.
1835: அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.
1907: கனடாவில் பாலமொன்று உடைந்ததால் 75 தொழிலாளர்கள் பலி.
1910: ஜப்பான் - கொரியா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, கொரியாவில் ஜப்பானிய ஆட்சி அமுலுக்கு வந்தது.
1944: ஜேர்மனியின் நாஸி படைகளுக்கு எதிராக 60,000 ஸ்லோவாக்கிய துருப்பினர் கிளர்ச்சி செய்தனர்.
1949: சோவியத் யூனியன் தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது.
1950: கொரிய யுத்தத்தில் பங்கேற்க பிரித்தானிய படைகள் கொரியாவுக்குச் சென்றன.
1996: நோர்வேயில் இடம்பெற்ற விமான விபத்தில் 141 பேர் பலி.
1997: அல்ஜீரிய கிராமமொன்றில் 98 கிராமவாசிகள் ஆயுதபாணி குழுவொன்றினால் கொல்லப்பட்டனர்.
2005: அமெரிக்காவில் கத்ரினா சூறாவளியினால் 1836 பேர் பலியாகினர்.
2007: அமெரிக்காவில் அணுவாயுதங்கள் தாங்கிய 7 ஏவுகணைகள் மினோட் விமானப்படைத் தளத்திலிருந்து பார்க்ஸ்டேல் விமானப்படைத்தளத்திற்கு முறையானஅனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது
26 minute ago
32 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
45 minute ago