Ilango Bharathy / 2022 ஜூன் 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1665: முன்னாள் டச்சு குடியேற்ற பிரதேசமாக இருந்த நியூயோர்க்கில் மாநகர நிர்வாகத்தை இங்கிலாந்து ஏற்படுத்தியது.
1889: வட அயர்லாந்தில் இடம்பெற்ற ரயில் விபத்தினால் 78 பேர் பலி.
1898: ஸ்பெய்னிடமிருந்து பிரிந்து பிலிப்பைன்ஸ் சுதந்திர பிரகடனம் செய்தது.
1943: உக்ரேனில் ஜேர்மனிய படைகளல் 1180 யூதர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1964: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1975: இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஊழல் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டார்.
1991: மட்டக்களப்பில்; 152 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
1991: ரஷ்ய ஜனாதிபதியாக பொரிஸ் யெல்ட்சின் பதவியேற்றார்.
1994: போயிங் 777 விமானம் முதல் தடவையாக பறந்தது.
1999: நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.
2003: தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்கு, தமிழக அரசு தடை விதித்தது.
2005: அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் ten bin bowling என்ற விளையாட்டினை ரொரண்டோவில் உலக சாதனைக்காக 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து விளையாடி தனது முப்பதாவது கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்.
2006: கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.
2006: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
23 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
53 minute ago