2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 15

Ilango Bharathy   / 2021 ஜூலை 15 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பிரித்தானிய படையினரிடம் சரணடைந்தார்.

1888: ஜப்பானில் எரிமலையொன்று வெடித்ததால் சுமார் 500 பேர் பலி.

1927: ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 89 பேர் பலியாகினர்.

1955: அணுவாயுதங்களுக்கு எதிரான பிரகடனமொன்றில் நோபல்பரிசு பெற்ற 8 பேர் கையெழுத்திட்டனர்.

1974: சைப்ரஸ், நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள், ஜனாதிபதி மக்காரி யோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோஸ் சாம்ப்சனை ஜனாதிபதியாக்கினர்.

1983: பாரிசில் ஓரி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8பேர் கொல்லப்பட்டு 55பேர் காயமடைந்தனர்.

1991: இலங்கை எழுத்தாளர் நெல்லை க.பேரன், எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.

2002: வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் ஊடகவியலாளர் டானியல் பேர்ளப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த 'அகமது ஷேக்' என்பவனுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

2003: மோஸில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

2006: டுவிட்டர் சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2009: ஈரானில் இடம்பெற்ற விமான விபத்தினால் 153 பேர் பலியாகினர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X