Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 27 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1214: பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.
1549: பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.
1627: தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.
1789: அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது.
1794: பிரெஞ்சுப் புரட்சி - புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரை தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.
1862: சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பனாமா நோக்கிச் சென்றுகொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.
1865: வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.
1880: இரண்டாவது ஆங்கில - ஆப்கானியப் போர் - மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.
1921: பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.
1929: மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
1941: ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.
1953 :கொரிய யுத்தம் முடிவடைந்தது.
1975: விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.
1976: ஜப்பானிய பிரதமர் ககுவேய் டனாகா, வெளிநாட்டு நாணயமாற்று சட்டத்தை மீறினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதானார்.
1983: வெலிக்கடை சிறையில் 18 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். இரு நாட்களில் இரண்டாவது தடவையாக இத்தகைய சம்பவம் நடைபெற்றது.
1990: பெலாரஸ் சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1990: திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.
1997: அல்ஜீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2002: உக்ரேனில் இடம்பெற்ற விமான சகாசத்தின்போது விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 85 பேர் பலி.
2007: பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.
2015: இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் உயிரிழந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago