Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
S. Shivany / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
1478 – இங்கிலாந்தின் 4ஆம் எட்வர்டு மன்னனுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவரது மூத்த தமையன் கிளாரன்சு இளவரசர் ஜோர்ஜிற்கு இலண்டன் கோபுரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1637 – எண்பதாண்டுப் போர்: இங்கிலாந்தின் கோர்ன்வால் கரையில், எசுப்பானியக் கடற்படைக் கப்பல்கள் மிக முக்கியமான ஆங்கிலோ-டச்சு வணிகக் கப்பல்கள் 44 ஐ வழிமறித்துத் தாக்கி அவற்றில் இருபதைக் கைப்பற்றின. ஏனையவை அழிக்கப்பட்டன.
1745 – மத்திய சாவகத்தில் சுராகார்த்தா நகரம் உருவாக்கப்பட்டு, சுராகார்த்தா சுல்தானகத்தின் தலைநகராக்கப்பட்டது.
1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ரால்ஃப் அபகுரொம்பி
1832 – யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிவெள்ளி தோன்றியது.
1861 – இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1861 – மான்ட்கமரியில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் சேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.
1873 – பல்கேரியப் புரட்சித் தலைவர் வசீல் லெவ்சுக்கி சோஃபியா நகரில் உதுமானியர்களால் தூக்கிலிடப்பட்டார்.
1911 – முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இடம்பெற்றது. இந்தியாவின் அலகாபாத் நகரில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள நைனி நகருக்கு 6,500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன.
1930 – ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் கிளைட் டோம்பா புளுட்டோவைக் கண்டுபிடித்தார்.
1932 – சீனக் குடியரசிடம் இருந்து மஞ்சுகோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் ஜப்பானிய இராணுவம் ஜப்பானிய விரோத சீனர்களைத் தேடி அழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜேர்மனிப் படையினர் வெள்ளை ரோசா இயக்கத்தினரைக் கைது செய்தனர்.
1946 – மும்பைத் துறைமுகத்தில் இடம்பெற்ற கடற்படை மாலுமிகளின் பம்பாய் கலகம் பிரித்தானிய இந்தியாவின் ஏனைய மாகாணங்களுக்கும் பரவியது.
1946 – இலங்கையில் ருவான்வெலிசாய தாதுகோபுரத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான புத்தரின் உருவ ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது.
1947 – பிரான்சியப் படையினர் அனோய் நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வியட் மின் படைகள் காட்டுக்குள் தப்பி ஓடினர்.
1948 – மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா இதனைப் பெற்றுக் கொண்டார்.
1957 – நியூசிலாந்தில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1957 – கென்யாவின் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமாத்தி பிரித்தானியக் குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.
1959 – நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1965 – காம்பியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1972 – கலிபோர்னியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த அனைத்துக் கைதிகளினதும் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற அம்மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1992 – மகாமக குளம் நெரிசல்: கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்தனர்.
2001 – அமெரிக்கப் புலனாய்வாளர் ராபர்ட் ஆன்சென் சோவியத் ஒன்றியத்தின் உளவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
2001 – இந்தோனேசியாவில் தயாக், மதுரா மக்களிடையே இனக்கலவரம் வெடித்தது. 500 பேர் வரையில் உயிரிழந்தனர். 100,000 மதுரா மக்கள் இடம்பெயர்ந்தனர்.
2003 – தென் கொரியாவில் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
2004 – ஈரான், நிசாப்பூர் நகரில் கந்தகம், பெட்ரோல், உரம் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் 295 பேர் உயிரிழந்தனர்.
2007 – அரியானாவின் பானிப்பத் நகரில் விரைவுத் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
2010 – விக்கிலீக்ஸ் பிராட்லி மானிங் என்ற அமெரிக்க இராணுவ வீர்ர் ஒருவர் கொடுத்த இரகசிய ஆவணங்களின் முதல் தொகுதியை வெளியிட்டது.
2013 – பெல்சியத்தின் பிரசெல்சு வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தில் கூ50 மில்லியன் பெறுமதியான வைரங்கள் கொள்ளையிடப்பட்டன.
2014 – உக்ரைன் தலைநகர் கீவில் ஆர்பாட்டக்காரர்களுக்கும், காவல்துரையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 76 பேர் உயிரிழந்தனர்,
2014 – ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
2018 – ஈரானின் அசிமான் விமானம் 3704 சக்ரோசு மலைகளில் மோதியதில் அதில் பயணம் செய்த 65 பேரும் உயிரிழந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
48 minute ago
6 hours ago