Princiya Dixci / 2021 மார்ச் 10 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
1629: இங்கிலாந்து மன்னன் 2 ஆம் சார்ள்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ஆட்சியை தனது சுய கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆரம்பித்தான். இந்நிலை 11 வருடகாலம் நீடித்தது.
1876: அலெக்ஸாண்டர் கிறஹம் பெல் முதலாவது வெற்றிகரமான தொலை அழைப்பை மேற்கொண்டார்.
1906: பிரான்ஸில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 1099 பேர் பலியாகினர்.
1922: பிரித்தானிய ஆட்சியாளர்களால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 2 வருங்களின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார்.
1933: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 115 பேர் பலி.
1945: 2 ஆம் உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பானிய பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தின. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர்.
1959: திபெத்தில் தலாய் லாமா சீனப்படைகளால் கைது செய்யப்படலாம் எனக் கருதப்பட்டதால் அவரை சூழ 3 லட்சம் திபெத்தியர்கள் அரணாக திரண்டனர்.
1969: அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை கொன்றவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2003: விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் கொல்லப்பட்டனர்.
2006: செவ்வாய் உளவு சுற்றுக்கலன் செவ்வாய்க் கோளை அடைந்தது.
2011: ஜப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.
11 minute ago
14 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
26 minute ago