Ilango Bharathy / 2022 மே 11 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1812: பிரித்தானிய பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் நாடாளுமன்றத்தில் வைத்து கொல்லப்பட்டார்.
1867: லக்ஸம்பர்க் சுதந்திரம் பெற்றது.
1924: இரு நிறுவனங்களை இணைத்து மேர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
1945: ஜப்பானின் ஒகினாவா கரையோரத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான யூ.எஸ்.எஸ். பங்கர் ஹில் மீது ஜப்பானிய கமிகாஸ் படையினர் தாக்கியதால் 346 பேர் பலியாகினர். இக்கப்பல் பலத்த சேதத்திற்கு மத்தியில் அமெரிக்காவை அடைந்தது.
1949: சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என இரண்டாவது தடவையாக மாற்றப்பட்டது.
1949: ஐ.நா.வில் இஸ்ரேல் இணைந்தது.
1995: அணுவாயுத பரவல் தடைச் சட்டத்தை நீடிப்பதற்கு நியூயோர்க்கில் 170 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
1996: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற 8 பேர் ஒரே தினத்தில் பலியாகினர்.
1997: ரஷ்ய செஸ் வீரர் கெரி கஸ்பரோவை ஐ.பி.எம். டீப் புளூ எனும் கணினி தோற்கடித்தது.
1998: இந்தியாவின் பொக்ரான் பகுதியில் 3 அணுகுண்டுகளை வெடிக்கவைத்து இந்தியா சோதனை நடத்தியது.
22 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago