2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ​மே 15

Ilango Bharathy   / 2022 மே 15 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1811: ஸ்பெய்னிடமிருந்து பரகுவே சுதந்திரம் பெற்றது.

1905: ரஷ்யாவின்  கண்ணிவெடிகளில் சிக்கிய ஜப்பானிய யுத்தக் கப்பலொன்று 496 பேருடன் மூழ்கியது.

1929: அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீயினால் 123 பேர் பலியாகினர்.

1932: புரட்சி நடவடிக்கையொன்றின்போது ஜப்பானிய பிரதமர் இனுகாய் சுயோக்ஷி பலியானார்.

1940: மெக்டொனால்ட் நிறுவனம் அமெரிக்காவின் சான் பேரனார்டினோ நகரில் தனது முதலாவது உணவுவிடுதியை திறந்தது.

1948: இஸ்ரேல் மீது எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா, ஈராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் படையெடுத்தன.

1948 அரபு-இஸ்ரேல் யுத்தம் ஆரம்பம். 1972: இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து அமெரிக்காவின் கட்டுப்பட்டிலிருந்த ஒகினவா தீவு மீண்டும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் வந்தது.

1988: ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் யூனியன் துருப்புகள் வெளியேற ஆரம்பித்தன.

2010: 17 வயதான ஜெஸிக்கா வட்ஸன் எனும் சிறுமி படகு மூலம் உலகை தனியாக சுற்றிவந்த மிக இளமையான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X