Ilango Bharathy / 2022 மே 15 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1811: ஸ்பெய்னிடமிருந்து பரகுவே சுதந்திரம் பெற்றது.
1905: ரஷ்யாவின் கண்ணிவெடிகளில் சிக்கிய ஜப்பானிய யுத்தக் கப்பலொன்று 496 பேருடன் மூழ்கியது.
1929: அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீயினால் 123 பேர் பலியாகினர்.
1932: புரட்சி நடவடிக்கையொன்றின்போது ஜப்பானிய பிரதமர் இனுகாய் சுயோக்ஷி பலியானார்.
1940: மெக்டொனால்ட் நிறுவனம் அமெரிக்காவின் சான் பேரனார்டினோ நகரில் தனது முதலாவது உணவுவிடுதியை திறந்தது.
1948: இஸ்ரேல் மீது எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா, ஈராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் படையெடுத்தன.
1948 அரபு-இஸ்ரேல் யுத்தம் ஆரம்பம். 1972: இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து அமெரிக்காவின் கட்டுப்பட்டிலிருந்த ஒகினவா தீவு மீண்டும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் வந்தது.
1988: ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் யூனியன் துருப்புகள் வெளியேற ஆரம்பித்தன.
2010: 17 வயதான ஜெஸிக்கா வட்ஸன் எனும் சிறுமி படகு மூலம் உலகை தனியாக சுற்றிவந்த மிக இளமையான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.
23 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
53 minute ago