2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 31

Ilango Bharathy   / 2022 மே 31 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

1902: இரண்டாம் பூவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா, பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.

 

1910: தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.

1911: டைட்டானிக் கப்பல், வட அயர்லாந்து, பெல்ஃபாஸ்ட் நகரில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1911: மெக்சிக்கோ புரட்சி - மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் பொர்பீரியோ தீயாசு, நாட்டை விட்டு வெளியேறினார்.

1921: அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது, 39 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

1935: பாகிஸ்தானின் குவெட்டா நகரில், 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 40,000 பேர் உயிரிழந்தனர்.

1941: ஆங்கில - ஈராக்கியப் போர் - ஐக்கிய இராச்சியம் ஈராக்கை மீளக் கைப்பற்றியது.

1942: இரண்டாம் உலகப் போர் - ஜப்பானியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைத் தாக்கின.

1961: தென்னாபிரிக்கா, பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.

1962: மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

1970:  பெருவில் இடம்பெற்ற 7.9 அளவு நிலநடுக்கத்தில், யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டது. இதில், 70,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 50,000 பேர் காயமடைந்தனர்.

1973: சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம், 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

1997: கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் திறக்கப்பட்டது.

1981: யாழ்ப்பாணத்தின் பல இடங்களில், நள்ளிரவில் வன்முறைகள் ஆரம்பமாயின. யாழ். பொது நூலகம், அடுத்த நாள் எரியூட்டப்பட்டது.

2004: இலங்கை பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன், மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2005: இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப், கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2017: காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில், 90 பேர் கொல்லப்பட்டனர், 463 பேர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X