J.A. George / 2023 ஜூன் 15 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
10,000 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த யூரியா உர மூட்டை 9,000 ரூபாய்க்கு இன்று (15) முதல் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் சில அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரம் கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பாக ஏற்கனவே அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பணி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் அமைச்சர் கூறினார்.
30 minute ago
43 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
58 minute ago
3 hours ago