2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

சித்தி விநாயகர் ஆலயத் தேர்த்திருவிழா கோலாகலம்

Mayu   / 2026 மார்ச் 31 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் ஆதிமூலநாயகன் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று (31) செவ்வாய்க்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது.

பிரம்மாண்ட சித்திரத்தேர் 29 அடி உயரத்தில் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டிருந்தது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆதிமூலநாயகன் எழுந்தருளி, உள்வீதி மற்றும் வெளிவீதி வழியாகச் சிங்காரமாகப் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேளதாள வாத்தியங்கள் முழங்க, "அரோகரா" கோஷம் வானை எட்ட, பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

வ.சக்தி 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .