Editorial / 2020 ஜூலை 14 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை, ஹக்மன, கொங்கல பகுதியில் பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மோதி விட்டு தப்பிச்சென்ற டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரன்ன, கட்டக்கடுவ, கொடயிம்பரகம பகுதியில் வீடொன்று அருகில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த டிப்பர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (13) குறித்த லொறி மோதிய சம்பவத்தில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில், அதில் 36 வயதுடைய ஒருவர் உயிரிழந்திருந்தார்.
ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும், சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்த நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago