2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

மலையக வீட்டு திட்டத்தில் பாரபட்சம் : மக்கள் போராட்டம் (வீடியோ)

Mayu   / 2026 மார்ச் 31 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளைப் பிரதேசத்திற்குட்பட்ட நாயாபெத்த தோட்டத்தில், மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் தனி வீட்டுத் திட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் திங்கட்கிழமை (30) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்,  பயனாளர் தேர்வில் குளறுபடிகள்: தோட்டத்திற்கு வெளியிலிருந்து வேலைக்கு வருபவர்களுக்கும், ஏற்கனவே வீடுகள் பெற்றவர்களுக்கும் மீண்டும் வீடுகள் வழங்கப்படுவதாகவும், 

தகுதியானவர்கள் புறக்கணிப்பு: நீண்டகாலமாகத் தோட்டத்தில் வசித்து வரும், உண்மையில் வீடு தேவைப்படும் தகுதியுடைய குடும்பங்கள் இத்திட்டத்தில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகவும்,

வெளிப்படைத்தன்மை இன்மை: பயனாளிகளைத் தெரிவு செய்யும் நடைமுறையில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை என்றும், தகுதியானவர்களுக்கு இதில் நீதி கிடைக்கவில்லை என்றும் 
 குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். 

மேலும், நிரந்தரமாகத் தோட்டங்களில் வசித்து வரும் தொழிலாளர் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், தற்போது தயார் செய்யப்பட்டுள்ள பயனாளர் பட்டியலை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, தகுதியானவர்களுக்கு வீடுகள் கிடைப்பதை உறுதிசெய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமுனுகுல, பண்டாரவளை நிருபர்கள்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .