J.A. George / 2021 ஜூன் 30 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ கொரோனா தடுப்பூசியை இன்று (30) பெற்றுக்கொண்டார்.
தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது பழங்குடியினர் அவராவார்.
கண்டியில் உள்ள ஆலயமொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில், இன்று காலை ஆதிவாசிகள் மக்கள் குழு, தங்கள் தலைவருடன் சேர்ந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டது.
ஓகஸ்ட் மாதம் கண்டியில் நடத்தப்படும் வருடாந்த எசல பெரஹேராவின் தொடக்க விழாக்களில் பங்கேற்கவுள்ளதால் அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதேவேளை, முற்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கையாக வ வருடாந்த எசல பெரஹேராவின் பங்கேற்றும் ஏனையவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026