2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மின்வெட்டால் மக்கள் சிரமம்.

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்முனை மாநாகரசபைக்கு உட்பட்ட கல்முனை மற்றும் கல்முனைக்குடி பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதனால் பொதுமக்களும் மாணவர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கல்முனைக்குடி, சாஹிபு வீதி, ஹனிபா வீதி, அலியார் வீதி, நகர மண் வீதி மற்றும் புதிய வீதி ஆகிய பிரதேசங்களில் பகல் மற்றும் இரவு வேளைகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.

இவ்வாறு அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் இரவு வேளைகளில் பாடசாலை மாணவர்கள் தமது மீட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்த தடையைச் சீர் செய்து தடையின்றி மின்சாரத்தை வழங்க இலங்கை மின்சார சபை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுக்கோள் விடுக்கின்றனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .