2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

குடிநீர் இணைப்பு விவகாரத்துக்கு தீர்வு

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                      (எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)


கல்முனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 456 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கு நீர் இணைப்பு விவகாரத்துக்கு இன்று இடம் பெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல் மூலம் தீர்வு காணப்பட்டது.

சுனாமியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீர் இணைப்பை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தாமதத்தைக் கருத்திற் கொண்டு> கல்முனைப் பிரதேச புத்திஜீவிகள், மதப்பெரியார்கள் மற்றும் வீட்டுத்திட்ட குடியிருப்பாளார்கள் ஒன்றினைந்து ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இன்று வீட்டுத்திட்ட வளாகத்தில் இடம் பெற்றது.

இதன் போது அங்கு வருகை தந்த கல்முனை பிரதேச நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் ஐ.எல்.எம். ஜவாஹிர் மற்றும் சபையின் ஏனைய அதிகாரிகளினால் நாளை மறுதினம் நீர் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதிக்கமைவாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முடிவுக்கு வந்ததுடன், அங்கு 15 பேர் கொண்ட இடைக்கால கூட்டு ஆதன முகாமைத்துவக் குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

alt

alt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7