2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறை மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு செயலமர்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவின் எற்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று அம்பாறை மாவட்டச் செயலக  மண்டபத்தில் நடைபெற்றது.

அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதேச செயலாளர்கள்,  உதவிச் செயலாளர்கள்,  சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்,  சமூக சேவை உத்தியோகத்தர்கள்,  மகளிர் சிறுவர் பிரிவு பொலிஸ் அதிகாரிகள்,  கிராம சேவை அதிகாரிகள்,  யுனிசொப் அதிகாரிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்கள்.

இங்கு,   சிறுவர் உளவியல், சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் பாதுகாப்பு சட்ட ஆலோசனைகள் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதில் சிரேஷ்ட உளவியலாளர் ஈ.ஏ.ரி. ஆரியவன்ச,  மாவட்ட சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி எம்.ஏ.லால்குமார, அம்பாறை மாவட்ட நீதிமன்ற சிரேஷ்ட சட்டத்தரணி யு.பி.யு.எல்.காலகே ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .