2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அக்கரைப்பற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 16 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 9 நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு  10 இலட்சம் ரூபாய் நிதியுதவியளித்துள்ளதாக அக்கரைப்பற்று வள்ளியம்மை - கந்தையா ஞாபகார்த்த நம்பிக்கை நிதியத்தின் தலைவர் க. லோகநாதன்
தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில்  விவேகானந்தா வித்தியாலயம், பனங்காடு பாசுபதேஸ்வரம் வித்தியாலயம்,  திருநாவுக்கரசு வித்தியாலயம்,  தர்ரெட்ண வித்தியாலயம், பெருநாவல் வித்தியாலயம், இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை, விபுலானந்தா மாணவர் இல்லம், ஆலையடிவேம்பு கலாசார மண்டபம்,  சுவிடேஸ்சன் ஆகியவற்றில் தங்கியிருந்த மக்களை பார்வையிட்ட அக்கரைப்பற்று வள்ளியம்மை - கந்தையா ஞாபகார்த்த நம்பிக்கை நிதியத்தின் தலைவர்  தலா ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .