2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி சாரதி பலி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். மாறன்)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சாரதியொருவர் உயிரிழந்துள்ளதாக  அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

அக்கரைப்பற்று 7௮ பொது வீதியிலுள்ள வீட்டில் சாரதியாக கடமையாற்றும்  மேற்படி நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  3 மணியளவில் வாகனத் தரிப்பிட கராச் கதவைத் திறந்து உழவு இயந்திரத்தை எடுக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கியுள்ளது.   

மின்சாரம் தாக்கியதில்  படுகாயமடைந்த இவர்,  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனளிக்காததால்  உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

கோளாவிலி முதலாம் பிரிவைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சண்முகம் ரஞ்சன் (38 வயது)  என்பவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் ஆவர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .