2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆலையடி வீதியில் மின்சாரக் கம்பிகள் பதிவாக காணப்படுவதால் மக்கள் அச்சம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 09 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (எஸ்.மாறன்)


மண்டூர், கணேசபுரம் ஆலையடி வீதியில் இரு மின்சார தூண்களுக்கிடையில் செல்லும் மின்சாரக் கம்பிகள் நிலத்தில் பதிவாக செல்வதால் இவ்வீதி வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளதாக அம்மக்கள் தெரிவித்தனர்.

இவ்வீதியில் எல் - 49 ஈ,  எப் - 1 ஈ,  ஜி.பி - 28 ஃ6  என்ற இலக்கமுடைய மின்சாரத் தூணுக்கும் எல் - 49 ஈ எப் - 1, ஜி.பி. 28ஃ 7  என்ற இலக்கமுடைய மின்சாரத் தூணுக்குமிடையிலான மின்சாரக் கம்பிகளே பாதசாரிகளின் தலையில் முட்டுமளவில் பதிந்து செல்கின்றன.  இது தொடர்பாக மின்சாரசபையிடம் பலமுறை முறைப்பாடு தெரிவித்தும் எந்தவித  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே  உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .