2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் மீண்டும் வெற்றிபெற தவறிய மாகாணசபை உறுப்பினர்கள்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                             (ஹனீக் அஹமட்)
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இம்முறை அம்பாறை மாவட்டம் சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் தமிழ், முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான கல்முனையைச் சேர்ந்த கே.எம்.எம். ஜவாத், எம்.ஏ. அப்துல் மஜீத் (பொத்துவில் மஜீத்) ஆகியோர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.

மேலும், அமைச்சர் அதாவுல்லாவின் அணி சார்பாக கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாணசபை உறுப்பினராகவிருந்து இம்முறை முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட மருதமுனையைச் சேர்நத எம்.எல்.துல்கர் நஹீம் என்பவரும் (துல்சான்) தோல்வியைத் தழுவியுள்ளார்.

இதேவேளை, கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்களாகப் பதவி வகித்து, இந்தத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களான எஸ்.செல்வராசா, எஸ். புஷ்பராசா ஆகியோரும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X