2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சம்மாந்துறையில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)

2013ஆம் ஆண்டிற்கான தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைய சம்மாந்துறை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவை எதிர்வரும் வியாழக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சுர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நடமாடும் சேவையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் பிரதம அதிதியாகவும் மேலதிக அரசாங்க அதிபர் அஸங்க அபேவர்த்தன கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நடமாடும் சேவையில் ஜனாதிபதி செயலகம் உட்பட 80 திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு மக்களுக்கான சேவைகளை வழங்கவுள்ளனர்.

இதன்போது பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதுடன், வலது குறைந்தவர்களுக்கு முச்சக்கர நாற்காலிகளும் சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களுக்கு உபகார நிதிகளும் வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X