2025 மே 01, வியாழக்கிழமை

ஒரு வாரத்துக்கான மின் துண்டிப்பு குறித்து அறிவிப்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 11 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை மறுதினம் சனிக்கிழமை (13)  கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட தரவைக்கோவில், கடற்கரைப்பள்ளி, அம்மன்கோவில், இஸ்லாமாவாத் வீட்டுத்திட்டம், உடையார் வீதி, அம்பாறை பிரதான வீதி, கல்முனை பிரதான வீதி, வீரமுனை, புதுப்பள்ளி, தைக்காப்பள்ளி, சொறிக்கல்முனை, விழினியடி, பொலிஸ் வீதி  ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 04.15 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (15) நிந்தவூர், சாம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சின்னப்பாலமுனை, கோணாவத்தை, தியட்டர் வீதி, மல்கம்பிட்டி, நெய்னாகாடு ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.

செவ்வாய்க்கிழமை (16) கல்முனை, நிந்தவூர் ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி, அன்னமலை, நட்பிட்டிமுனை, மணல்சேணை, சேனைக்குடியிருப்பு, ஒலுவில், திராய்கேனி ஆகிய பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் மின் தடைப்படும். 

புதன்கிழமை (17) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட நிந்தவூர்பகுதிகளில்  பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

வியாழக்கிழமை (18) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய  மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சின்னப்பாலமுனை, கோணாவத்தை வௌவாலோடை,   சென்னல் கிராமம், உடங்க 40 வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

சனிக்கிழமை (20) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய  மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை, ஜீ.ரீ.ஸி. தெற்கு, வடக்கு வீதி, முஸ்தபா புரம், ஹிஜ்ராபுரம், சம்புமடு ஆகிய பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .